மதுரை, மே 18- மதுரை காமராசர் பல்க லைகழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 136 பேர் தொகுப்பூதிய பணியாளர் கள் மற்றும் தற்காலிக பணி யாளர்கள் பணியமர்த்தப் பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பல்க லைக் கழகத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 136 பேரும் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டனர். 136 பேரும் துப்புரவு பணியா ளர் முதல் கணினி இயக்கு பவர் வரை என பல பதவி நிலைகளில் கடந்த 10 ஆண்டு களாக கடுமையாக பணி யாற்றியவர்கள். நிதியை கார ணம் காட்டி பணி நீக்கம் செய் ததை கண்டித்தும் அவர் களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார் பில் பல்கலைக்கழகம் முன்பு மே 18 புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஜெ. மூர்த்தி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா பேசி னார். தோழமைச்சங்க நிர் வாகிகள் பெ.சீனுவாசகன், பி. அய்யங்காளை, டி.ராஜி, இரா.தமிழ், சு.பழனிவேலு ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க பொதுச்செய லாளர் ஆ.செல்வம் நிறை வுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் மு.ராம்தாஸ் நன்றி கூறினார்.