மதுரை, ஜூன் 19- ரிசர்வ் வங்கி சமீபத்தில் தங்க நகை அடகு கடன் பற்றிய புதிய வழிகாட்டு தல்களை வெளியிட்டது. இந்த உத்தரவின் படி, நகை அடகு வைப்பவர்கள் 6 மாதத்திற் குள் முழு தொகையையும் திருப்பித் தர வேண்டும். மீண்டும் அடகு வைக்க விரும்பி னால், 2 நாட்கள் கழித்து புதிதாக பில் உள்ளிட்ட ஆவணங்களுடன் அடகு வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக சிறு, நடுத்தர மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், மத்திய நிதியமைச்சரை நேரில் சந் தித்து, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண் டும் என்றும், நகை அடகு கடனுக்கான தொகையை 85 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மத்திய நிதி யமைச்சர், ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் பேசி, புதிய நிபந்தனைகள் மீதான குழப் பங்களை தெளிவுபடுத்தச் சொன்னதாக தக வல் வெளியானது. அதன் பின் ரிசர்வ் வங்கி வெளியிட்ட விளக்கத்தில், ஏற்கனவே அடகு வைத்துள்ள நகைகள் பழைய முறையி லேயே தொடரலாம் என்றும், முழுத் தொகை யை திருப்பித் தர வேண்டிய கட்டாயம் இல்லையெனவும் கூறப்பட்டது.
வங்கிகள் உள்ளூர் அளவில் விதிகளை பின்பற்றவில்லை
ஆனால் நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு பின்பும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சிட்டி யூனியன் பேங்க், கனரா வங்கி உள்ளிட்ட பல அரசு வங்கிகள் பழைய நடைமுறையை மீறி வாடிக்கையாளர்களிடம் முழுத் தொகை யையும் செலுத்திய பின்னர் மட்டுமே மறு அடகு செய்ய முடியும் எனக் கூறி வரு கின்றன. எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த வாடிக் கையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “2024 மே 29 அன்று சிம்மக்கல் ஸ்டேட் பேங்க் கிளையில் ரூ.1.65 லட்சம் மதிப்பிலான நகையை அடகு வைத்தேன். மே 15, 2025 முதல் என் மொபைலில் குறுஞ்செய்தி வந்தது. வங்கிக்கு சென்றபோது, ரூ.1.85 லட்சம் சேர்த்து முழுத்தொகையை கட்டி திருப்பி வைத்து மீண்டும் அடகு வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் புதிய வழிகாட்டுதலை கூறியபோதும், அதிகாரி கள் அதைப்பற்றி எந்த உத்தரவும் எங்க ளுக்கு வரவில்லை என்று கூறினர். தொடர்ந்து அழைத்தும் பணம் செலுத்த அழுத்து கிறார்கள்” என்றார். வட்டிக்கு வாங்கி திருப்பும் நிலை மகபூப்பாளையத்தைச் சேர்ந்த ஜே.பாபு கூறுகையில், “ஒராண்டுக்கு முன்பு நகை யை ரூ.1 லட்சம் மதிப்பில் பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள கனரா வங்கி கிளையில் அடகு வைத்தேன். தற்போது முழுத் தொகை யையும் திருப்பிக் கொடுத்து மீண்டும் அடகு வைக்கலாம் என வங்கி கூறுகிறது. இதனால் வெளியில் வட்டிக்கு பணம் வாங்கித்தான் நகையை திருப்ப வேண்டிய நிலை உள்ளது” என்றார் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையா ளர்கள் கூறுவது, மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி தெளிவாக அறி விப்புகளை வெளியிட்டாலும், வங்கிகள் நிலு வையிலான உத்தரவுகளை எடுத்துக் கொண்டு வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துகின்றன. அதனால் அரசு மற்றும் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு தெளிவான கடிதம் மற்றும் நடைமுறை செயல்பாட்டை அவசரமாக வழங்கி, பொதுமக்கள் குழப்பத்தில் அகப் படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்து கின்றனர். - ஜெ.பொன்மாறன்