districts

img

சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் தேனி மாவட்டத்தில் ஆய்வு

தேனி, செப்.2- தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மனுக்கள்  குழுத்தலைவர் மற்றும்  அரசு தலைமை கொறடா  கோவி.செழியன் , மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலை யில் கருவேல்நாயக்கன்பட்டியில் தேனி அல்லி நகரம் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம், குன்னூரில் ஆதிதிரா விடர் நல மேல்நிலைப்பள்ளி, வைகை அணை  அருகிலுள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, சோத்துப்பாறை அருகில் வாய்க்கால் பாலம் சீர மைப்பு பணி, பெரியகுளம் தலைமை மருத்துவ மனை, லட்சுமிபுரம் மாவட்ட தலைமை நீதி மன்றம் முன்பு உள்ள நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  கோ.ஐயப்பன்  (கடலூர்),.ப.கார்த்திகேயன்,(வேலூர்),பாபு   (செய்யூர்), கே.பொன்னுசாமி (சேந்த மங்கலம்), வை.முத்துராஜா (புதுக்கோட்டை) மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலா ளர் கி.சீனிவாசன்  ஆகியோர் வியாழனன்று ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் , ஆண்டி பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் ஆகி யோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, லட்சுமிபுரம் மாவட்ட  தலைமை நீதிமன்றம் அருகில் நவீன முறையில்  பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மனுக்கள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அரசு பள்ளி மாணவிகள் சரமாரி புகார் ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் சட்ட மன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.  அப்போது பள்ளிக்கு வெளியே கழிவுநீர் தேங்கி  நின்று சுகாதாரக்கேடாக இருந்தது. வகுப்ப றைக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது மாணவிகள், பள்ளிக்கு விளையாட்டு மைதானம் வசதி வேண்டும். உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். மாலை மற்றும் விடுமுறை நாட்க ளில் சமூக விரோதிகள் சிலர் பள்ளிக்குள் புகுந்து  மது அருந்துகின்றனர். மதுபான பாட்டில்களை உடைத்து போட்டு செல்கின்றனர். பள்ளிக்கு  வரும்போது நாங்கள் தான் அவற்றையெல்லாம் சுத்தம் செய்கின்றோம். சுகாதார மற்றும் பாது காப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்”  என்றனர். இதைக்கேட்ட குழுவினர் ஆதிதிரா விடர் நலத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்களை கண்டித்தனர்.