இராமநாதபுரம்,நவ.30- மாற்றுத்திறனாளி பெண் வியாபாரி மாரியம்மாளை தரக்குறைவாக பேசிய செயல் அலுவலர் சேகர் மீது வழக்கு பதிந்து, கைது செய்ய வேண் டும் என்று வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் புதன்கிழமை யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நிர்வாகி நூர்முக மது தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் பேசு கையில், சாயல்குடி பேரூ ராட்சி செயல் அலுவலர் மீது புகார் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத் தும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை இதுகுறித்து உடனடியாக விசாரித்து ஒரு பெண் மாற்றுத்திறனாளியை பாதுகாக்க எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. குற்றச் சாட்டுக்கு உள்ளான செயல் அலுவலர் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை. மாற் றுத்திறனாளிகள் சட்டப்படி மனித உரிமை மீறல்கள் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவதில் காவல் துறைக்கு தயக்கம் இருப்பது ஏன்? இது குறித்து உயர் அதி காரிகள் விசாரித்து நட வடிக்கை எடுக்க வேண்டும். வருகிற டிசம்பர் 3 மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தினம் அன்று செயல் அலுவ லர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மற்றும் பதவி நீக்கம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி மாவட்ட அளவிலான இயக்கங்களை நடத்துவோம் என்று தெரி வித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ. கண்ணகி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில்வாக னன், சிஐடியு வாரச்சந்தை வியாபாரிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.முத்து விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.