திருவில்லிபுத்தூர், ஏப்.27- திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவி லுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் ஆகா யத்தாமரை செடிகளை அகற்றிய பணியா ளர்களுக்கு பாராட்டுவிழா நகர் வளர்ச்சி இயக்கம் சார்பில் திருமுக்குளம் தென்கரை யில் நடைபெற்றது. விழாவிற்கு வளர்ச்சி இயக்க தலைவர் ஜி.சந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் மல்லிகா முன்னிலை வகித்தார். நகர் வளர்ச்சி இயக்க பொருளாளர் உதயசூரியன் வரவேற்றார். நகர்மன்றத் தலை வர் தங்கம் ரவி கண்ணன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு பணியாளர்களுக்கு கேடயங்களை வழங்கினார். விழாவில் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, திருவில்லிபுத்தூர் ரோட்டரி சங்க தலைவர் வேலாயுதம், மக்கள் சேவை மைய செயலாளர் ரவீந்திரநாத், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.