districts

மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் எலச்சிபாளையத்திற்கு வருவாய் ஆய்வாளர் நியமனம்

நாமக்கல், பிப்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தின் காரணமாக, எலச்சிபாளையத்திற்கு புதிய வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகேயுள்ள எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லஞ்ச ஒழிப் புத் துறையினர் மூலம் கைது செய் யப்பட்டார். ஆனால், அதற்கு பிறகு புதி தாக வருவாய் ஆய்வாளர் நியமிக்கப் படாததால், இருப்பிடம், வருமானம், முதியோர் உதவித்தொகை, பிறப்புச் சான்று, வாரிசு சான்று போன்ற பல் வேறு சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்த னர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இருப்பினும், வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்படாத நிலையில், எதிர் வரும் பிப்.21 ஆம் தேதியன்று எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளராக லட்சுமணன் வெள்ளியன்று பொறுப்பேற்றுக் கொண் டார். இதனால் இப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கும், தொடர் போராட்டங் களை முன்னெடுத்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக் களை தெரிவித்தனர்.