தேனி,மார்ச் 14- தேனி மாவட்டம், ஆண்டி பட்டி அருகே வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்டத்தில், வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி, கடமலை மயிலை, தேனி உள்ளிட்ட 265 ஊராட்சி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ரூ.167 கோடி மதிப்பீட்டிலான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த பணிகளுக்காக பிளாஸ்டிக் குழாய்கள் ஆண்டி பட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டி பகுதியில் ஒரு தனியார் பெட்ரோல் பல்க் அரு கில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மார்ச் 14 அன்று மாலையில் குழாய்களில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்புகள் அருகில் ஏற்பட்ட தீவிபத்தால் பொதுமக்கள் அச்ச மடைந்து ஓடினர். பெட்ரோல் பல்க்கில் வேலை செய்த பணி யாளர்களும் ஓடினர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆண்டிபட்டி தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடு பட்டனர். ஏராளமான பொது மக்களும், இளைஞர்களும் மற்ற இடங்களுக்கு தீ பரவாத வகையில் நடவடிக்கையில் ஈடு பட்டனர். இதனையடுத்து ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, தேனி, பகுதியில் உள்ள 3 தீய ணைப்பு வாகனங்களில் தீய ணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீய ணைப்புத்துறையினருடன் நூற்றுக்கணக்கான மக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டதை தொடர்ந்து தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீவிபத்தினால் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தி ருந்தது. இந்த விபத்தில் ரப்பர் குழாய்கள், பெட்ரோல் பல்க்கில் இருந்த ஜெனரேட்டர் என ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.