மதுரை கிழக்கு ஒன்றியம் யா. கொடிக்குளம் ஊராட்சியை சார்ந்த ஆயி என்ற பூரணம் அம் மாள் தன் மகள் ஜனனியின் நினைவாக அப்பகுதி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் உயரிய நோக்கில் நடு நிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்த கூடுதல் கட்டிடம் கட்ட தனது சொந்த நிலத்தில் 91 சென்ட் (தான செட்டில்மெண்ட்) பள்ளிக்கல்வித் துறைக்கு திங்களன்று (பிப்.5) தான மாக வழங்கியுள்ளார்.
ஏற்கனவே அப்பள்ளிக்கு தனது நிலத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட 1 ஏக்கர் 52 சென்ட் தானமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பூரணம் அம் மாள் அவர்களுக்கு குடியரசு தினத்தன்று ‘‘முதலமைச்சர் சிறப்பு விருது’’ வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.