நாகர்கோவில், ஜன.10- 2022 பிப்ரவரி 23, 24 தேதிகளில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய அனைத்து தொழிற்சங் கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நாகர்கோவிலில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், கொரோனா பெருந்தொற்றில் பணிபுரிந்த முன்களப் பணியா ளர்களுக்கு உரிய பாதுகாப்பும், காப்பீடு வசதிகளும் வழங்க வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்து, அனைத்து பொருட்களின் விலையேற் றத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தேசிய அளவில் பொது வேலை நிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க நடந்த ஆயத்த மாநாட்டில் சிஐடியு சார்பில் மாநி லச் செயலாளர் கே.ஆறுமுகநயி னார், மாவட்டச் செயலாளர் கே.தங்கமோகனன், தலைவர் பி.சிங்காரன், பொருளாளர் சித்ரா, துணை செயலாளர் எஸ். அந்தோணி, எச்எம்எஸ் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் முத்து கருப்பன், மாநில செயல் தலைவர் எம்.சுப்ரமணிய பிள்ளை, சி. ஜெரால்டு, மாவட்ட தலைவர் கடையால் சி.பால்ராஜ், ஏஐடியுசி மாநில செயலாளர் எஸ்.காசிவிஸ்வநாதன், மாவட்ட செயலாளர் எஸ்.ராஜு, மாவட்ட தலைவர் கே.சி துரை ராஜ், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் சி.அனந்தகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் டி. ஆல்பர்ட், எல்.பி.எப் மாநில துணை செயலாளர்கள் வி அல்போன்ஸ், வ. இளங்கோ, மாவட்ட செயலாளர் சி. ஞான தாஸ் மற்றும் அனைத்து தொழி லாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்