districts

img

மேலூரில் விவசாயத் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

மதுரை, ஜூலை 30 -   நூறு நாள் வேலை  திட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர் களுக்கும் ஒரு ஆண்டுக்கு நூறு நாளும் வேலை வழங்க வேண்டும். சட்ட கூலி நாள் ஒன்றுக்கு ரூ.319 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்ற போராட்டத்தில், மேலூர் மற்றும் கொட்டாம் பட்டி ஒன்றியத்தில் 2024-2025 ஆண்டுக்கான நூறுநாள் வேலை இதுவரை வழங்கப் படவில்லை. நூறுநாள் வேலையில், 15 நாட்கள் வேலை வழங்கவில்லை என்றால், 15 நாட்களுக்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் சொல்கிறது.  எனவே அந்த சட்டப்படி உட னே வேலை வழங்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்திற்கு சங்கத்தின் மேலூர் தாலுகா செயலாளர் ஏ.தனசேகரன் தலைமை வகித்தார். சங்கத் தின் மாநிலப் பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம், மதுரை மாவட்டச் செயலா ளர் வி.உமாமகேஸ்வரன் ஆகியோர் பேசினர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு உறுப்பினர் எஸ். பாலா, தாலுகா செயலாளர் எம்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பி.மணவாளன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

சங்கத்தின் தாலுகா தலைவர் பி.குமரன், பொரு ளாளர் கே.கணேசன், துணைத் தலைவர் ஏ.குறிச் சான், துணைச் செயலாளர் என்.ராஜா, விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப் பினர் பி.எஸ்.ராஜாமணி, சிஐடியு தாலுகா செயலாளர் வி.சேகர் மற்றும் மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீர னூர், கிடாரிப்பட்டி, புதுச்சுக் காம்பட்டி, தும் பட்டி, பள்ள பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

போராட்டத்தின் இறுதி யில், மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் (பி.டி.ஒ.)  ரத்தனகலாவதியிடம் மொத்தம் 412 மனுக்கள் வழங் கப்பட்டன. மனுக்களைப் பெற்று கொண்ட அவர், வரும் வியாழக்கிழமை (1.8.2024) வேலை கொடுப்ப தாக கூறினார்.