districts

மதுரை முக்கிய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

தேனி, ஜூலை 21- முல்லைப் பெரியாறு அணையில் வியாழனன்று  தண்ணீர் திறப்பு 2016 கன அடியாக உயர்த்தப்பட் டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது  135.60 அடியாக உள்ளது. நீர்வரத்து 1114 கன அடி. புதன்கிழமை வரை 1885 கன அடி திறக்கப்பட்ட நிலையில்  வியாழனன்று காலை முதல் 2016 கன அடி நீர் திறக்கப்படு கிறது. நீர் இருப்பு 6017 மில்லியன் கன அடி. வைகை அணை நீர்மட்டம் 58.92 அடி. நீர் வரத்து 1756 கன அடி.  திறப்பு 969 கன அடி. இருப்பு 3406 மி.கன அடி. மஞ்சளாறு  அணையின் நீர்மட்டம் 49.40 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 70.15 அடியாகவும் உள்ளது. மழையளவு: வைகை அணையில் 8 மி.மீ, சோத்துப் பாறை அணையில் 3 மிமீ மழை பெய்துள்ளது.

நூலகங்களுக்கு பள்ளி புத்தகங்கள் வழங்க கோரிக்கை

பழனி, ஜூலை 21- தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. போட்டித் தேர்வுக்கு பள்ளி பாடப் புத்தகங்களே அடிப்படையாக திகழ்கிறது. ஆனால் பல்வேறு ஏழை எளிய மாண வர்கள் பள்ளி பாட புத்தகங்கள் கிடைக்காமல் சிரமப்படு கின்றனர். எனவே தமிழக அரசும் ,தமிழ்நாடு பாடநூல் கழ கமும் இணைந்து மாவட்டங்களில் உள்ள மைய நூலகம் மற்றும் கிளை நூலகங்களில் பள்ளிகளில் பயன்பாடு இன்றி இருக்கும் பள்ளிப் பாட புத்தகங்கள் கிடைக்க வழி வகை செய்தால் பல்லாயிரக்கணக்கான போட்டித் தேர்வர்  களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே ஏழை மாண வர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி பாடப் புத்தகங்கள் நூலகங்களில் கிடைக்க வழிவகை செய்யுமாறு ஆயக்குடி  மரத்தடி இலவச பயிற்சி மையம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இடப்பிரச்சனையால் ஆட்சியரகத்தில் மூதாட்டி தற்கொலை முயற்சி 

தேனி, ஜூலை 21- இடப் பிரச்சனையில் காவல் துறையினர் நடவடிக்கை  எடுக்கவில்லை எனக் கூறி மூதாட்டி ஒருவர் தேனி ஆட்சி யர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற் கொலைக்கு முயன்றார். பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்தவர் ராமலட்சுமி (75) .இவர் வியாழனன்று காலை மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் வந்து திடீரென உடலில் மண் ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பணியில் இருந்த காவல்துறையினர் அவரை  தடுத்து நிறுத்தினர். பின்னர் ஆம்புலன்ஸை வர வழைத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவ ருக்கு பாத்தியப்பட்ட வீடு பெரியகுளத்தில் தென்கரை தெற்கு புதுத்தெருவில் உள்ளது. அந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் லோகநாதன், அவ ரது மகன் நாகராஜன் ஆகியோர் வீடு கட்டி வரு கிறார்கள். இது குறித்து காவல்துறையினர் மற்றும் வரு வாய் துறையில் புகார் அளித்தும் அவருக்கு சாதகமாக  உள்ளனர். இதனால் தற்கொலைக்கு முயன்றதாக ராம லட்சுமி தெரிவித்தார்.

அஞ்சல் நியமன தேர்வு முடிவுகள் வெளியீடு இரண்டரை ஆண்டு தாமதத்திற்கு முடிவு

சு.வெங்கடேசன் எம்.பி.யின் கடிதத்திற்கு அமைச்சர் பதில்

மதுரை, ஜூலை 21-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டு தாம தத்திற்குப் பிறகு, அஞ்சல் நியமன  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள் ளன. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.,  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வரு மாறு: 2020 நவம்பர் 29 இல் நடத்தப்பட்ட அஞ்சல் துறை குரூப்- பி தேர்வுகளின் முடிவுகள் இரண்டரை ஆண்டுகளாக வெளியிடப்படாததையும், அதற்கு தடை  யாக சொல்லப்பட்ட நீதிமன்ற வழக்கும் முடிவுக்கு வந்து விட்டதையும், தாம தம் காரணமாக 100 அஞ்சல் மாவட்ட  சேவைகள், ஐந்தாண்டு காலி இடங்  கள் நிரப்பப்படாததால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் நான் 30.04.2022 அன்று  ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ் ணவுக்கு கடிதம் எழுதி இருந்தேன்.  அதற்கு அமைச்சரிடமிருந்து பதில் வந்துள்ளது. 1.6.2022 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட தென்றும், அது www.indiapost.gov.in தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  தீர்வு காணப்பட்ட தகவல் ஒரு மாதம்  தாமதமாக வந்திருந்தாலும், இரண் டரை ஆண்டு பிரச்சனை முடிவுக்கு வந்து ஐந்தாண்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மதுரையில் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

மதுரை, ஜூலை 21- மதுரையில் உள்ள கட்டுமான நிறுவனங்களான அன்னை பாரத், கிளாட்வே, கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய  நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான  வரித்துறையினர் இரண்டாவது நாளாக வியாழனன்றும் சோதனை நடத்தினர்.  இந்நிறுவனங்கள் வருவாயை முறையாக காட்டா மல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படை யில் புதனன்று சோதனையை தொடங்கினர்.  வியாழனன்று நடத்திய சோதனையில் முக்கிய ஆவ ணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டுள்ள தாகவும், கணக்கில் வராத ரூ.50 கோடிக்கும் அதிகமான  பணம் மற்றும் 3 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இதே போல் திண்டுக்கலை தலைமையிடமாக கொண்டு மதுரை,  தேனி மாவட்டங்களில் செயல்படும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ராம ரத்தினம் என்பவரது ஆர். ஆர் இன்ப்ரா  நிறுவனத்தில் கணக்கில் வராத 100 கோடி ரூபாய் பணம்  மற்றும் 10 கிலோ தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை இன்றும் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திருவில்லிபுத்தூர் ரத வீதிகளில்  ஆக்கிரமிப்புகள் அகற்றம் 

திருவில்லிபுத்தூர், ஜூலை 21-  திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதனையொட்டி தேர் செல்லும் தேரடி கீழ ரத வீதி, மேல  ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதிகளில் சாலையின் இரு புறம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி  துவங்கியது. திருவில்லிபுத்தூர் நகராட்சி நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை, காவல்துறை, ஆகிய துறை கள் இணைந்து இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை  நடத்தின. ரத வீதிகளில் கடைக்கு முன்பு போடப்பட்டுள்ள தற்காலிக பந்தல்கள், டீக்கடைகளுக்கு முன்பு உள்ள பெஞ்சுகள், விளம்பர பதாகைகள் அனைத்தும் அகற்றப்  பட்டன. இந்தப் பணியில் திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் வெண்ணிலா, நகர் காவல் சார்பு ஆய்வாளர் வேல்சாமி ஆகியோர் ஈடுபட்டனர். 

வாலிபர் சங்க மதுரை மாநகர் மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

மதுரை, ஜூலை 21- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட 17 வது மாநாடு வரவேற்புகுழு அமைப்புக்  கூட்டம் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க அரங்கில் மாவட்டத்  தலைவர் பி. கோபிநாத் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மதுரை மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன் , மாமன்ற  உறுப்பினர் டி. குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதில் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக கே. அலாவுதீன், செயலாளராக ஏ. பாலு, பொருளாளராக ச.  சரண் உள்ளிட்ட 32 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது

விருதுநகர், ஜூலை 21- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம்- சத்திரப் பட்டி சாலையில் உள்ளது அழகை நகர். இங்கு கனரா வங்கின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.  இதில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் கடந்த 18 ஆம் தேதி கடப்பாரை உள்ளிட்ட கருவி களால் சேதப்படுத்தப்பட்டது. அப்போது சத்தம் வரவே கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு மர்ம நபர் தப்பினார். இதுகுறித்து ராஜ பாளையம் தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர். பின்பு, கைரேகை நிபுணர்கள், ஏ.டி.எம். இயந்தி ரத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சி பதிவுகளை  வைத்து விசாரணையை தொடங்கினர். அதில் கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்த வர் என்பது தெரியவந்தது. அதில், பீகார் மாநிலம் சோம னப்பள்ளி தாலுகாவைச் சேர்ந்த சதானந்த் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

போடியில் சுவர் இடித்ததில்  கூலித் தொழிலாளி பலி

தேனி, ஜூலை 21- போடியில் சுவர் இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி  கூலித் தொழிலாளி இறந்து போனது குறித்து காவல்துறை யினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.  போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி அம்சமணி (47). இவர் கட்டுமான தொழிலாளி. போடி டி.வி.கே.கே.  நகரை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டுவதற்கு டி.வி.கே. கே.நகரை சேர்ந்த ராஜையா மகன் காமாட்சி (55) என்ப வர் ஒப்பந்தம் போட்டு வேலை செய்து வருகிறார். இந்த பணியை காமாட்சி மகன் மதனகோபாலகிருஷ்ணன் (35) என்பவர் மேற்பார்வையில் பாண்டி என்பவர் பழைய  சுவரை இடிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். ஜூலை 13 ஆம் தேதி சுவர் இடிக்கும்போது சுவருக்கு  அருகே வேலை செய்து கொண்டிருந்த அம்சமணி மீது விழுந்து பலத்த காயமடைந்தார். தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த னர்.இதில் ஜூலை 21 வியாழக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அம்சமணியின் கண வர் முருகேசன் (53) கொடுத்த புகாரின் பேரில் கவனக் குறைவாக செயல்பட்டு உயிர்ப்பலி ஏற்படுத்தியதாக காமாட்சி, மதன கோபாலகிருஷ்ணன், பாண்டி ஆகி யோர் மீது போடி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் இராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் கைது

இராமேசுவரம், ஜூலை 21-  இராமேசுவரம் மீனவர்  கள் 6 பேரை இலங்கை கடற்  படையினர் வியாழக்கிழமை யன்று கைது செய்தனர்.  இராமநாதபுரம் மாவட் டம், இராமேசுவரம் துறை முகத்திலிருந்து புதன்கிழ மையன்று 539 விசைப்படகு களில் 3 ஆயிரத்திற்கும் மேற்  பட்ட மீனவர்கள் மீன்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க  சென்றனர். வியாழக்கிழமை யன்று அதிகாலையில் கச் சத்தீவு நெடுந்தீவு அருகே  மீன்பிடித்துக் கொண்டிருக் கும் போது 5 ரோந்து கப்ப லில் வந்த இலங்கை கடற் படையினர் இராமேசுவரம் வேர்க்கோடைச் சேர்ந்த அ.ஆரோக்கியராஜ் (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்  தனர். படகில் இருந்த மீன வர்கள் பாலமுருகன்,(32),டி.அந்தோணி (38), கே.அர்ஜு னன் (23) ஜெ.மடுகு பிச்சை  (45),கே. தங்கப்பாண்டி (55),  ராஜா (21) ஆகிய ஆறு மீன வர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்  றனர். இலங்கை கடற்பகு திக்குள் அத்துமீறி மீன்பிடித் ததாக வழக்கு பதிவு செய் துள்ளனர். மீனவர்கள் 6 பேரை நீரியல்துறை அதி காரிகளிடம் ஒப்படைத்தனர்.  இந்த நிலையில், தங்கச்சிமடத்தை சேர்ந்த எடிசன் என்பவரது படகின் பலகை உடைந்து கடல் தண்  ணீர் புகுந்தது. இதனால் படகு  கடலில் மூழ்க தொடங்கி யது. சக மீனவர்களை உத விக்கு அழைத்து படகில்  இருந்த 7 மீனவர்களை மீட்ட னர். மூழ்கிக்கொண்டிருந்த படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர், ஜூலை 21- விருதுநகரில் புதிய பேருந்து நிலையத்தை இயக்குவது குறித்து அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சரியான முடிவு ஏதும் எட்டப்படவில்லை. விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்கள் சரியாக இயங்கியது இப்பேருந்து நிலையம். பின்பு, இரு பேருந்து நிலை யங்களுக்கும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் என மாவட்ட நிர்வாகம் தவறான முடிவை எடுத்தது. இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் காட்சிப் பொருளாக மாறிப் போனது. அருகில் உள்ள மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புதிய பேருந்து நிலையங்கள் சிறப்பாக இயங்கி வரும் நிலையில், விருதுநகரில் மட்டும் புதிய பேருந்து நிலையமானது முதியோர்கள் நடைபயிற்சி செய்யும் இடமாக மாறிப்  போனது. குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவில், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் இருநது இயக்கப்படும் பேருந்துகள் தற்போது விருதுநகரையே புறக்கணித்து வருகின்றன. விருதுநகருக்கு பேருந்து செல்லாது என  நடத்துநர்களே கூறி பயணிகளை ஏற்றாமல் செல்லும் நிலை தற்போது வரை தொடர்கிறது. பைபாஸ் ரைடர் பேருந்துகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே நின்று செல்லும். இதன் காரணமாக, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி செல்லும் பயணி கள், தங்களது இரு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நிறுத்தி விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதிய  பேருந்து நிலையத்தை செயல்படுத்த வேண்டுமென கடந்த ஜூன் 16 அன்று தர்ணா போராட்டம் நடத்தி யது. அதில், தென் பகுதியில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலை யத்திற்கு வந்து செல்ல வேண்டும். விருதுநகரில் இருந்து நீண்ட தூரத்திற்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்தே இயக்  கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில், புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தலைமையில் புதன்கிழமை ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்ன ரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர்கள் பேசுகையில், தற்போது பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகர் பேருந்துகளை, அங்கிருந்தே இயக்கவும், அங்கி ருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்து களை, புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டுமென அறிவுறுத்தினர். அதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். அனைத்துப் பேருந்துகளையும் ஏதாவது ஒரு பேருந்து நிலையத்திருந்து இயக்க வேண்டும் என மோசமான யோசனையை முன்வைத்த னர். மேலும், ஒரு பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிக மாகவும், மற்றொரு பேருந்தில் பயணிகள் இல்லாம லும் செல்ல நேரிடும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, ஆட்சியர் மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து  ஆலோசித்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இரு பேருந்து நிலையத்தையும் இயக்க வேண்டும் என அமைச்சர்கள் ஆலேசானை தெரிவித்தனர். இதனால், புதிய பேருந்து நிலையத்தை இயக்கு வது குறித்து எந்த ஓரு முடிவும் எட்டப்படாமலேயே இந்தக் கூட்டம் நிறைவு பெற்றது.

அருப்புக்கோட்டை அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து: 10 பேர் காயம்

அருப்புக்கோட்டை, ஜூலை 21- அருப்புக்கோட்டை அருகே லாரி மீது  பேருந்து மோதியதில் 10 பயணிகள் படுகாய மடைந்தனர். அருப்புக்கோட்டையில் இருந்து பயணி களை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து  சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந் தது. பேருந்தை கிருஷ்ணன் (52) என்பவர் ஓட்டியுள்ளார். ஆத்திபட்டி அருகே வந்தபோது பேருந்தின் முன்னால் சென்ற பால் டேங்கர்  லாரியின் குறுக்கே திடீரென நாய் வந்த தாக கூறப்படுகிறது. நாய் மீது மோதாமல் இருப்பதற்காக டேங்கர் லாரி ஓட்டுநர் திடீ ரென வண்டியை நிறுத்தியுள்ளார். இதை யடுத்து, எதிர்பாராத விதமாக பேருந்து, டேங்கர் லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து போனது. மேலும், அதில் பயணம் செய்த ஜெயசெல்வி ( 45),  ஜெயந்தி (54), கிருஷ்ணன் (52), அருள்ராஜ்  (54), முத்து (40), சரவணன் (43), முருகன் (32) உள்பட 10பேர் காயமடைந்தனர். அவர்  களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்பு லன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றும் விவகாரம் 3 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூலை 21-  மக்களின் பெரும் போராட்டத்தால் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பை  ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உள்ளே ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத் தான பல மூலப் பொருள்கள் உள்ளன. அவ சரகால நிலைக்கு குறைந்த அளவு மின்சா ரம் வழங்கக் கோரி மனு அளித்த நிலையில் அவையும் நிராகரிக்கப்பட்டது.  இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் போது மருத்துவ ஆக்சிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்டக்குழு அனு மதி பெற்று 250 ஊழியர்கள் வேலை பார்த்த னர். தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்வ தற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்  ணெய்யை வெளியேற்றவும் மற்றும் ஆக்சி ஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்ய உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோ ரிடம் அனுமதி கேட்கப்பட்டது.  எனவே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகிய வற்றை வெளியேற்ற அனுமதித்து இடைக்  கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அதேபோல் தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் பொருட்கள் கழிவுகள் ஆகியவை வெளி யேற்ற அனுமதி அளிக்க வேண்டும்” என  கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் எஸ். எஸ். சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு  வியாழனன்று நடைபெற்றது.அப்போது நீதி பதிகள், வேதாந்தா நிறுவனம் தமிழக  அரசுக்கு கழிவுகளை அகற்ற அனுமதி  கோரிய விண்ணப்பத்தை தமிழக அரசின்  சுற்றுச்சூழல் துறை செயலர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தர விட்டார். அதே நேரத்தில் வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதனையும் பரிசீ லிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.