பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடு மைகளைக் கண்டறிய குஜராத் அரசால் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு - கண்காணிப்புக்குழு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கூட்டத்தைக் கூட நடத்தவில்லை. குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின்படி வன்கொடு மை வழக்குகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட இந்தக்குழுவின் நடவடிக்கைகளை அரசு கண்காணிக்க தவறிவிட்டது. குஜராத் அரசு தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து கவலைப்படவில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை யின்படி, மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எதிராக நான்கு வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறு வதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், குஜராத்தில் தான் அதிக அளவில் கொடுமைகள் நடக்கின்றன என்று குற்றம் சாட்டினார். ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, 2009-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மொத்தம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 17,022 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. வருடம் வாரியாக பதிவான வழக்குகள்: 2010- 1,008, 2017- 1477, 2018- 1,426, 2019- 1,416. இதில் மிக அதிக வழக்குகள் 2018-ஆம் ஆண்டு பதிவு செய்யப் பட்டுள்ளது. மிகக்குறைவாக 2010-ஆம் ஆண்டு 1,008 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதுவும் கூட ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.