வாலிபர் சங்கம் கோரிக்கை தூத்துக்குடி, ஜூலை 10- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி புறநகர் குழு சிறப்பு பேர வைக்கூட்டம் தலைவர் விக்னேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட துணை தலைவர் பா.ராஜா துவக்கி வைத்து பேசினார். 16 பேர் கொண்ட புதிய புறநகர குழு தேர்வு செய்யபட்டு தலைவராக பி.ஜான்சன், செயலாளராக சி.கண்ணன், பொருளாள ராக கார்த்திக் முத்து ஆகியோர் தேர்வு செய்யபட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்ட பொருளாளர் டேனியல் ராஜ் பேசி னார். நிறைவு செய்து சிஐடியு மாவட்ட தலை வர் இரா.பேச்சிமுத்து பேசினார். முத்தையாபுரத்தில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகை யில் காலை, மாலை நேரங்களில் முத் தையாபுரம் முதல் தூத்துக்குடி வரை கூடு தல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.