மதுரை மாவட்டம் ஓடைபட்டியில் பிரம்மாண்டமான ஊருணி உள்ளது. காட்டுப்பகுதியில் மழை பெய்தால் ஊரணியில் தண்ணீர் நிரம்பும். இந்த ஊரணியின் நான்கு பக்க சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள் இரவு நேரத்தில் கவனம் தவறினால் விபரீதம் நடக்கும் என்பது மட்டும் நிச்சயம்.