நாகர்கோவில், ஜுன் 30- கன்னியாகுமரி மாவட்டத்தில் 75-ஆவது சுதந்திர திரு நாள் அமுதப் பெருவிழா நடத்துவது குறித்து துறை அலு வலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், ஆட்சியர் அலு வலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மா.அர விந்த் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின், மாவட்ட ஆட்சியர் கூறிய தாவது: தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, இந்திய திரு நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையில், 75ஆவது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியானது, கன்னியா குமரி மாவட்ட அனைத்துத்துறையின் சார்பில் வெள்ளி (ஜுலை 1) முதல் வரும் 15.07.2022 வெள்ளி வரை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படவுள்ளது. ஜுலை 1 வெள்ளியன்று காலை 9.30 மணிக்கு புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் அனை வரும் இணைந்து நமது தேச பக்தியை உணர்த்தும் தேசிய கீதத்தினையும், தமிழ் உணர்வினை வெளிப் படுத்தும் தமிழ்த்தாய் வாழ்த்தினையும் ஒருசேர பாட வுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து, காலை 10.00 மணிக்கு கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அரசு மகளிர் பள்ளி மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தேச தலை வர்கள் வேடம் அணிந்து மாணவ, மாணவியர்கள் மேடை யில் தோன்றவுள்ளார்கள்.
தேசிய கீதத்தை ஒட்டுமொத்தமாகப் பாடுவது எனது பெருமையே என்று அனைத்து துறைகளும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். தேசிய கீதத்தை மத்திய, மாநில அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொதுமக்களை தேசிய கீதத்தை பதிவு செய்யவும் அதை சமூக ஊடகங்கள், அலுவலகம், பொதுமக்கள் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தவும் ஊக்குவிக்க வேண்டும். மேலும், மயிலாடி உழவர் சந்தையில் ஜூலை 2 மற்றும் 9-ஆம் தேதிகளில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையுடன் இணைந்து உழவர் சந்தை விற்பனை விழிப்புணர்வு கூட்டங்களுடன் Action @75 கருப்பொருள் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்களின் விளை பொருட்கள் விற்பனை முதலான வற்றை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதந்திரத்து டன் தொடர்புடைய அனைத்து நினைவு இடங்களையும் புதுப்பித்தல், நினைவுச்சின்னங்களை சுத்தம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, தேவைப்படும்பட்சத்தில் புதுப்பிக்கவும் மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா, கலைபண்பாடு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, வேளாண்மை, காவல், மீன்வளம், மாவட்ட தொழில் மையம், சமூக நலன், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி முகமை, பள்ளிக் கல்வி, மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துத்துறையினரும் ஒன்றிணைந்து 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள சுதந்திர தின அமுதப்பெரு விழா நிகழ்ச்சியினை ஆக்கப்பூர்வமாக நடத்திட அனைத் துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப் பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட் டாட்சியர் க.சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) அவ்வை மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எம்.ஆர்.வாணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்கு நர் ஷீலா ஜாண், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.