மதுரை, ஜூலை 26- கட்டாய இலவச கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளி யில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். நீதிமன்றம் வகுத்துள்ள இந்த விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமேபின் தங்கிய குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கோபால் மற்றும் சரவணன் ஆகியோர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர் மனுவில், தங்களது குழந்தை களுக்கு மதுரை மகாத்மா மெட்ரிகுலே ஷன் பள்ளியில் மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தின் ஆர்டிஇ அடிப்படையில் பள்ளியில் இட ஒதுக் கீடு வழங்க உத்தரவிடக்கோரியிருந்த னர். இந்த மனுவை செவ்வாயன்று விசா ரணை செய்த நீதிபதி ஜி. ஆர். சுவாமி நாதன் பிறப்பித்த உத்தரவில், மனு தாரர்கள் இருவரும் தங்களது குழந்தை களுக்கு ஒன்றிய அரசின் கட்டாய இல வச கல்வி திட்டத்தில் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் மனுதாரர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளே வசிக்கவில்லை என்ற கார ணத்தை கூறி பள்ளி நிர்வாகம் மனுவை நிராகரித்துள்ளது. மகாத்மா மெட்ரிக் பள்ளி சிறுபான்மையினர் பள்ளியும் கிடையாது. எனவே இவர்கள் இந்த சட்டத்திலிருந்து தப்பிக்கவும் முடி யாது. ஒன்றிய அரசின் கட்டாய கல்வி திட்டத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது ஒரு பள்ளியில் கட்டாய கல்வி திட் டத்தின் அடிப்படையில் பள்ளி ஒரு கிலோ மீட்டருக்குள் போதிய விண்ணப்பம் வர வில்லை என்றால் மூன்று கிலோமீட்டர் தூர விண்ணப்பிக்கும் மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண் டும் என்றும் மூன்று கிலோ மீட்டருக் குள்ளும் போதிய மாணவர்கள் விண் ணப்பிக்க வில்லை என்றால் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து விண் ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கூறி யுள்ளது. எனவே நீதிமன்றம் வகுத் துள்ள இந்த விதிமுறைகளை பின் பற்றினால் மட்டுமே பின்தங்கிய குழந்தை களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். எனவே இதனை கருத்தில் கொண்டு மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.