districts

img

5 ஆயிரம் இராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இராமேசுவரம், ஜூலை 23- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்கள் 6 பேருடன் படகை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஜூலை 23 சனிக்கிழமையன்று தொடங்கியது. இதில் 5 ஆயிரம் மீனவர்கள் பங்கேற்றனர். துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.   இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை மீன்பிடிக்க சென்ற போது ஒரு விசைப்படகு மற்றும் 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டு மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் துறைமுகத்தில் 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் ரூ.3 கோடி வரை மீன்பிடி ஏற்றுமதி வர்த்தம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி ஞாயிற்றுகிழமையன்று இராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவ சங்கம் அறிவித்துள்ளது.