தேனி, மே 28- தேனி மாவட்டத்தில் ரூ.112.67 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை போடியில் ஞாயிற்றுக்கிழமை யன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தேனி மாவட்டம் போடி நகராட்சியில் குடி நீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.106.15 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்கள், நகராட்சி நூற்றாண்டு நிறைவு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், கலை ஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பிலான பூங்கா, தேவதானப்பட்டி பேரூ ராட்சியில் மூலதன மான்யம் நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வாரச் சந்தை, பெரியகுளம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா, ரூ,56 லட்சம் மதிப்பீட்டில் சின்னராஜ் பூங்கா, கம்பம் நகராட்சியில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா, தலா ரூ.24.96 லட்சம் மதிப்பீட்டில் வார்டு 14, வார்டு 27-ல் கட்டப்பட்ட சமூதாய கழிப்பறை என மொத்தம் ரூ.112.67 கோடி மதிப்பீட்டிலான நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஆண்டிபட்டி பேரூராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.17.02 கோடி மதிப் பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.14.99 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி போடி நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்றது. துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, பொது சுகாதாரம், தாட்கோ ஆகிய துறைகளின் சார்பில் 68 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து ஆயிரத்து 637 மதிப்பிலான தேய்ப்பு பெட்டி, தையல் இயந்திரம், வீட்டுமனை பட்டா, மரக்கன்றுகள், கடனுதவி, மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன. தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா வரவேற்றார். மதுரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் வெ.ரகுபதி நன்றி கூறினார். கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ந.ராமகிருஷ்ணன், போடி நகர்மன்ற தலைவர் ச.ராஜராஜேஸ்வரி சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.