மதுரை, ஜன.18- கல்விக் கடன் வழங்குவதில் ரூ. 100 கோடி இலக்கினை எட்டியுள் ளோம். இன்னும் முயற்சிகளை மேற் கொள்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரி வித்துள்ளார். அவர் ஜனவரி 18 செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் நடப்பு கல்வியாண்டு 2021 - 22 ஆண்டுகளில் கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களை சமா ளிப்பதில் பெரும் இடர்பாடுகள் உள் ளது. மேலும் கொரோனா காலத்தில் பெரும் பிரச்சனைகளை சந்திக்க கூடிய சமூகமாக மாணவர் சமூகம் உள்ளது. தேசிய அளவில் மாணவர் களுக்கான கல்விக் கடன் என்பது இந்த ஆண்டு 54 சதவீதம் குறைந்துள் ளது என்று புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன. இந்த நிலையில் மதுரை மாவட்டத் தில் நாம் நிகழ்த்தியுள்ளது.
தேசிய அளவில் இது ஒரு மிகப்பெரும் சாதனை என்றே கூறலாம் மதுரை மாவட்டத்தில் 357 மேல்நிலைப் பள்ளி களில் இதற்கான முகாமினை நடத்தி யுள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மூன்று முறை மாவட்ட அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், மாநகராட்சி அதி காரிகளை ஒருங்கிணைத்து நடத்தி னோம். அதில் யாருக்கெல்லாம் கல் விக்கடன் கொடுக்கிறீர்கள் என்பதை தவிர்த்து யாருக்கெல்லாம் நிரா கரிக்கப்படுகிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி னோம். நியாயம் இல்லாத காரணத்திற் காக ஒரு மனு கூட நிராகரிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதன் தொடர்ச்சியாக மதுரையில் உள்ள 357 மேல்நிலைப் பள்ளிகளி லும் கல்விக்கடன் பெறுதல் பற்றி விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மூன்று ஆய்வுக்கூட்டங் கள் நடைபெற்றன. அக்டோபர் 20 ஆம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரி யில் மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தினோம். 1355 மாணவர் கள் பதிவு செய்தனர். அன்றைய நாளி லேயே 11.81 கோடி ரூபாய் கல்விக்கட னாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விண்ணப் பித்த அனைவரின் மனுக்களையும் முறையாகபரிசீலித்து கடன் வழங்கி யதில் 100 கோடி ரூபாய் என்ற சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதுவரை மதுரை மாவட்டத்தை சேர்ந்த 1095 மாணவர்களுக்கு 99.29 கோடி ரூபாய் கடன் தரப்பட்டுள்ளது . இதில் 12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 91.13 கோடி ரூபாயும் , 28 தனி யார் வங்கிகள் மூலம் 8.16 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது . அதில் மிக அதிகமாக கனரா வங்கி 38.21 கோடி ரூபாயையும் , பாரத ஸ்டேட் வங்கி 27.89 கோடி ரூபாயையும் கல்விக்கட னாக வழங்கியுள்ளது பாராட்டுக்குரி யது . இதற்காக பெரும் முயற்சியினை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இதற்காக தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட் டது.
இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கல்விக்கடனுக்கான அலுவலகம் தனியாகவே செயல் பட்டுக்கொண்டு இருக்கிறது. தனியார் வங்கிகள் 8, தேசிய வங்கிகளில் 311 என்று மொத்தம் 319 மனுக்கள் பரி சீலனையில் உள்ளது. இதில் பல மனுக் கள் ஏற்றுக் கொள்ளப்படலாம், அதே போல் மருத்துவம் சார்ந்த படிப்புக் கான விண்ணப்பம் இனிமேல்தான் பெறப்பட உள்ளது. அவையும் சேர்க் கப்பட்டால் ரூ. 150 கோடி என்ற இலக்கை நம்மால் எட்ட முடியும். இதுவரை பொதுத்துறை வங்கிகள் மூலம் 95, தனியார் வங்கிகள் மூலம் 5 விண்ணப்பங்கள் என்று 100 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து வங்கிகளிடம் விளக் கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் விதிமுறைகளுக்கு உட் பட்டு தான் இந்த மனுக்கள் நிராகரிக் கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள் ளார்கள். தமிழகத்தில் ஒன்றிய அரசு கல்விக் கடன் கொடுப்பது ஏன் குறைந்து வரு கிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கை யில், கல்வி நிலை குழுவில் நான் உள்ள தால் ஐந்து மாதங்களுக்கு முன்பு சென்னை மும்பை, புனே, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்டவைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் மும்பையிலும் கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரிலும் அதிக அளவில் கல்விக்கடன் என்பது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல அர சியல் காரணங்கள் இருந்தாலும் அது ஒரு நல்ல விஷயம் தான். மேலும் சென்னையிலும் மதுரையிலும் ஏன் இது சாத்தியமாகவில்லை என்றால் மும்பையில் பல வங்கிகளில் தலை மையகம் உள்ளது. அதனால் அங்கு சாத்தியப்படுகிறது.
அதுபோல் மதுரையினை முன்னு தாரணமாக கொண்டு நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்திற்கு இதை எடுத்துச் செல்வோம். இந்த கொரோனா காலத்திலும் இரண்டுமடங்கு கல்விக் கடன் மதுரை மாவட்டம் பெற்றுத் தந் துள்ளது என்பதையும் நிலைக்குழு கூட்டத்தில் எடுத்துச் சொல்வோம். வட்டித் தொகையை வங்கிகள் மாணவர்களின் நிலுவைத் தொகை யில் வைக்கக்கூடாது. வங்கிகள் நான்காண்டுகள் வட்டி தொகையினை ஒன்றிய அரசு கொடுக் கிறது என்று தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஒன்றிய அரசு வட்டி தொகை கொடுக்காத போது அதை மாண வர்களின் நிலுவைத்தொகையுடன் வங்கிகள் சேர்க்கக்கூடாது. ஒன்றிய அரசு கொடுக்கும் போது அதை வட்டி யில் வரவு வைத்துக்கொள்ள வேண் டும். ஏனென்றால் நிலுவையிலுள்ள தொகையோடு சேர்க்கும்போது மாண வர்களுக்கு பெரும் கடன் சுமையாக உள்ளது. எனவே இதுகுறித்து ஒன் றிய அமைச்சரிடம் வலியுறுத்த உள் ளேன் என்றார். மதுரை மாவட்டத்தில் இந்த திட்டம் குறித்து ஐந்து முறை ஆய்வு கூட் டங்கள் மற்றும் முகாம்கள் நடத்தப் பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டபோது வெள்ளிவீதியார் பள்ளிக்கு நான் சென்றிருந்தேன். அப்போது அப்பள்ளி யின் தலைமை ஆசிரியர் கூறுகை யில்,தங்களுடைய கல்விக்கடன் வழங்கும் முயற்சியால் எங்களுடைய பள்ளியில் உள்ள 8 மாணவிகளுக்கு உயர் கல்விக்கான கடன் கிடைத்துள் ளது இதேபோல் கடந்த ஆண்டு பல் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ஒரு மாணவி விண்ணப்பித்து 40 ஆயி ரம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற சூழ் நிலை வந்தபோது அவருக்கு கடன் கிடைக்காமல் அவர் அதை கைவிட் டார்.
இதுபோன்ற முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியது என்று கூறினார். அந்த அடிப்படையில் கடந்தாண்டு மதுரை மாவட்டத்தில் 45 ஆயிரம் மாணவர்கள் மேல்நிலைப் படிப்பை முடித்து வெளியேறியுள்ளார்கள் .நான்கில் ஒரு மாணவருக்கு உயர் கல்விக்கான கடன் உதவித்தொகை உயர்கல்விக்கு தேவைப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் 1100 மாண வர்களுக்கு பெற்றுக் கொடுத்துள் ளோம். இதுபோல் ஒவ்வொரு ஆண் டும் கல்விக்கடனை பெற்றுத் தரு வதற்கு எங்களால் ஆன முயற்சிகளை நாங்கள் செய்து கொண்டே இருப் போம் என்று கூறினார். இதேபோல் குறைந்த அளவிலான அதாவது ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயி ரம் வரை கல்விக் கடன் கிடைக்கா மல் கந்துவட்டிக்கு வாங்க கூடிய சூழ்நிலை உள்ளது அவர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கியுள் ளோம். மேலும் கல்விக் கடன் வேண்டு மென்று விண்ணப்பித்து நிராகரிக் கப்பட்ட அனைத்து விண்ணப்பங் களையும் இந்த ஆண்டு பரிசீல னைக்கு உட்படுத்துவோம்.
கல்விக்கடன் என்பது ஒரு தலை முறைக்கானது இதை எப்படி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக அமல் படுத்த முடியும் என்ற கேள்விக்கு, மக்களவை உறுப்பினர் என்ற அடிப்ப டையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து முயற்சிகளை மேற் கொண்டால் இதுபோன்ற திட்டங் களை செயல்படுத்த முடியும். மேலும் வங்கிகள் கல்விக் கடன் கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்பதை நாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிர்ப்பந்திக்கலம். கல்விக் கடன் வழங்குவதற்கு வங்கிகள் என்ன அளவுகோல் வைத் துள்ளது என்ற கேள்விக்கு, கடந்த காலங்களில் கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் முன் வந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளாக அது குறைந்துள் ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 54 சதவீதம் கல்விக் கடன் கொடுப்பது என்பது குறைந்துள் ளது. கல்விக் கடன் கொடுப்பதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் வங்கி கள் வழங்க வேண்டும் ஏனென்றால் இது ஒரு தலைமுறைக்கான பெரும் முயற்சி என்றே கூறவேண்டும். கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு 1300 கோடி ரூபாய் கடன் வரை தள்ளுபடி செய் யக்கூடிய வங்கிகள் கல்விக் கடன் களை அதுபோல் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் தொடர்ந்து கல்விக்கடன் பெறுவ தற்கான முயற்சிகளை மேற்கொள் வோம் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜய ராஜன், எஸ்.பாலா ஆகியோர் உடனி ருந்தனர்.