துச்சேரி, டிச. 27- நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,093 ஆக அதிகரித்துள்ள நிலையில், புதிதாக பரவி வரும் திரிபான ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக குஜராத்தில் 36 பேரும், கர்நாடகாவில் 34 பேரும் ஜேஎன்.1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 4 பேருக்கும் ஜேஎன்.1 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி உருளை யன்பேட்டைத் தொகுதி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (55) கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதனன்று உயிரிழந்தார். கர்நாடகாவில் இருவரும், குஜராத்தில் ஒருவரும் என ஒரே நாளில் நாடுமுழுவதும் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.