ஊழல் செய்துள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
.இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
துச்சேரியில் சட்டம் ஒழுங்கு பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்பட வில்லை. மக்கள் கடும் அவதி அடைந்து ள்ளனர். இது ஊழல் மலிந்த ஆட்சி. அதற்கான அறிக்கையை தயாரிக்க ஆயத்த வேலை நடக்கிறது.
காவல்துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை, காவல்துறை ஆகியவற்றில் ஊழல் மட்டுமல்லாமல் முதலமைச்சர், அமைச் சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பட்டி யலை தயார் செய்து வருகிறோம்.]முதல்வர் ரங்கசாமி வியாபாரம், தொழில் எதுவும் செய்யாமல் ரூ. 5 கோடியில் திருமண மண்டபம் மேட்டுப் பாளையத்தில் கட்டுகிறார். இதற்கான நிதி எங்கிருந்து வந்தது என்று அவர் பதில் சொல்ல வேண்டும். இது ஊழல் பணம். கலால் துறை ஊழல் மற்றும் பொதுப்பணித்துறை லஞ்சப்பணம் திலும் இந்த திருமண மண்டபம் கட்டு கிறார்.
அமைச்சர் ஒருவர் நகரப்பகுதியில் ஓர் இடத்தை மனைவியின் பெயரில் வாங்கியுள்ளார். அது வங்கி இருந்த இடம். அது தரைமட்டமாக்கப்பட்டது, தடுப்பு போடப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு பணம் எங்கிருந்து வந்தது. அவர் பாஜகவைச் சேர்ந்தவர். இது போல் பல உதாரணங்கள் இருக்கின் றன.
ஊழலை ஒழிப்பேன், நேர்மையான ஆட்சியை தரவே பிரதமராக இருக்கி றார் என்றெல்லாம் நரேந்திர மோடி கூறு கிறார். அவரது கட்சி புதுச்சேரி கூட்டணி யில் உள்ளது. முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஊழலில் ஈடு பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. உண்மையில் ஊழலை ஒழிப்ப தாக இருந்தால் முதல்வரையும், அமை ச்சரையும் சிறையில் தள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுவதற்காக ஊழல் இல்லாத ஆட்சி தருவதாக மோடி புலம்புகிறார். '
பிரதமர் அனைத்து மாநிலங்களை யும் கண்காணிக்கிறார். தற்போதைய குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் நட வடிக்கை எடுக்காவிட்டால் ஊழலுக்கு ஆதரவாக இருப்பதாகதான் அர்த்தம்.
ஆளுநரும் கூட்டுக்கொள்ளை. அதனால்தான் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.