districts

img

அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் விளையாட்டு விழா

அறந்தாங்கி, டிச.6 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி குழுமம் சார்பாக 24 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். கட்டுமாவடி சாலையில் இருந்து பள்ளி  மாணவர்கள் ஒலிம்பிக் தீபத்தை அறந்தாங்கி  நகர காவல் ஆய்வாளர் கருணாகரன் துவக்கி  வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும்  இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், அறந்தாங்கி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவ-மாணவிகளின் அனைத்து  விளையாட்டு போட்டிகளிலும் பெற்றோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் சுரேஷ்குமார்  வரவேற்றார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பள்ளி மாணவர்கள் பிரமிடு சாகசங்கள் செய்து காண்பித்தனர்.