புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகர் பகுதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சியை சேர்ந்த இந்திரா நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் முன்பாக உள்ள சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.