districts

img

செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கிணங்க சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழிகாட்டுதல் படி, அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் சார்பில் அறந்தாங்கி கலைஞர் பேருந்து நிலையம் அருகில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பலூன் விடும் விழா நடைபெற்றது. இதனை நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த் துவங்கி வைத்தார்.