districts

img

அறந்தாங்கி நகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அறந்தாங்கி,  ஜூன் 27 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி நகராட்சி 27  வார்டுகளை கொண்ட மாவத் டத்தில் இரண்டாவது பெரிய  நகரமாகும். இதில், நிரந்தர தூய்மை பணியாளர் களோடு, நூற்றுக்கணக்கான ஒப்பந்த தூய்மை பணியா ளர்கள் நகரை சுத்தம் செய்து வருகிறார்கள்.  இவர்களுக்கு மாதந்தோ றும் குறிப்பிட்ட காலத்தில் சம்பளம் வழங்குவதில்லை. மாதம் 5 ஆம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி, தினம்  ரூ.449 சம்பளம் வழங்க வேண்டும். தூய்மை பணியா ளர்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்தி கொள்ள  வேண்டும். வார விடுப்பு வழங்க வேண்டும். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர் களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.  வருங்கால வைப்பு நிதி யில் இருந்து கடன் வழங்க  வேண்டும் உள்பட பல  கோரிக்கைகளை முன்வைத்து  உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் முக மதலிஜின்னா தலைமை யில், சிபிஎம் மாவட்டக் குழு  உறுப்பினர் தங்கராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்ட துணைத் தலைவர் கவிபாலா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கர்ணா, உள்ளாட்சி தொழிலாளர் சங்க நகர செயலாளர் மாணிக்கம் மற்றும் நூற்றுக் கணக்கான தூய்மை பணி யாளர்கள் நகராட்சி அலுவ லக வாயிலில் அமர்ந்து கோரிக் கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி முழக்கம் எழுப்பி னர்.