districts

img

100 நாள் வேலை கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி திங்களன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டி.சலோமி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் த.அன்பழகன், பொருளாளர்  எம்.பாலசுந்தரமூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அன்புமணவாளன், விதொச ஒன்றியச் செயலாளர் ஏ.லாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.