districts

img

பழனி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது  

பழனியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.  

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே உள்ள கே.வேலூரில் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் அகமது ரபி(56). இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இடைநிலை ஆசிரியர் அகமது ரபி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகவும், மாணவிகளை அநாகரிகமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர், வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கல்வித்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆசிரியர் அகமது ரபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

அதனைதொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர் தரப்பில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பிறகு போலீசார் ஆசிரியர் அகமது ரபியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

;