நாகர்கோவில், டிச.25- காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியா குமரியை நெருங்கி வருவதையடுத்து 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்களன்று (டிச.26) குமரியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்களுக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு அந் தந்த பங்கு தந்தைகள் மூலமாகவும், மீனவ பிரதிநிதிகள் மூலமாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்பு மாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் ஒரு சில மீனவர்கள் மட்டுமே ஆழ்கடலில் மீன் பிடித்து வரு கிறார்கள். அவர்களும் கரை திரும்புமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறை முகங்களிலும், கடற்கரை கிராமங்களிலும் நாட்டுப்புற படகுகள் மற்றும் விசைப்பட குகளை பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன.