நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியை அமைச்சரை எ.வ.வேலுவுடன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி எம்எல்ஏ ஆய்வு செய்தார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கவுதமன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தலைவர் உ.மதிவாணன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.