districts

img

ஓஎன்ஜிசியை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், செப்.2 - காவிரிப் படுகையில், இயற்கை எரிவாயு, ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட  இயற்கை வளங்களான பூமிக்கு அடியில் கிடைக்கக் கூடிய வாயுக்களை ஓஎன்ஜிசி உள்ளிட்ட எந்த நிறுவனமும் எடுக்கக் கூடாது  என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஓஎன்ஜிசி நிறுவனத்தை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விச நாகை மாவட்டச் செயலாளர் கோவை.சுப்ரமணி யன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் வீ.சுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். விதொச நாகை மாவட்டச் செயலாளர் எம்.முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;