நாகப்பட்டினம், ஏப்.2 - நாகை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குகள் கேட்டு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசினார். சிபிஎம் மாநில குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி, திமுக மாவட்டச் செயலாளர் என்.கௌதமன், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் நாக.அருட்செல்வன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.என்.அமிர்த ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.
நாகப்பட்டினம் ஒன்றியம், ஆழியூர், தேமங்கலம், பெருங்கடம்பனூர், சிக்கல், மஞ்சக்கொல்லை, அக்கரைப்பேட்டை, வடக்கு பொய்கைநல்லூர், வடவூர், ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு களை சேகரித்தனர்.