தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏழை நகர்ப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட இங்கிலாந்து 24 ஆவது வார்டு பெரிய சிங்களாந்தியில் இத்திட்டத்திற்கான பணி செவ்வாயன்று நடைபெற்றது. இப்பணியை சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜெயபிரகாஷ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் துவக்கி வைத்தனர்.