திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினராக பணியாற்றிய கோமல் முருகானந்தம் செவ்வாயன்று காலை காலமானார். அவரது உடல் புதன்கிழமை காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து மயானத்திற்கு புறப்படும். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, கே.என்.முருகானந்தம், ஆர்.குமாரராஜா, கே.தமிழ்மணி, தெற்கு ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.