நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி சிபிஎம் உறுப்பினர்கள், திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே.கலைவாணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் உடனிருந்தனர்.