சிபிஎம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் மணலி கிளையின் முன்னாள் செயலாளர் வி.ராமசாமியின் 21 ஆவது நினைவு தின நிகழ்ச்சி திங்களன்று அவரது நினைவிடத்தில் நடந்தது. நினைவு ஸ்தூபிக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். கட்சி உறுப்பினர்கள் மற்றும் வி.ராமசாமியின் மனைவி, மகன் லெனின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.