திருவள்ளூர், ஆக. 8- தமிழ்நாடு முழுவதும் பல்வேறு புறம்போக்கு நிலங்களில் குடியிருக் கும் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சிறப்பு குழுவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள செதில்பாக்கம் கிராமத்தில் உள்ள காலனியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக அங்கேயே வாழ்ந்து வருவதால், மக்கள் தொகை அதிகரித்து இடநெருக்கடியால் பாதிக்கப்படுகின்ற னர். ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வரை குடியிருக்கின்றனர். இடநெருக் கடியை போக்க அதேகிராமத்தில் அனைவருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 118 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2019 ஆம் ஆண்டு முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. செதில் பாக்கம் கிராமத்தில் சர்வே எண் 155 பி- ல் அரசிற்கு சொந்தமான 13 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த நிலத்தை இட நெருக்கடி யால் பரிதவிக்கும், ஆதிதிராவிடர் மக்களுக்கு தலா 3 செண்டு நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2019 ஆண்டு முதல் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. எனினும் அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.
குண்டுக்கட்டாக கைது
இந்த நிலையில் வியாழனன்று (ஆக. 8), வீட்டுமனை இல்லாத செதில் பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆதி திராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி நிலத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையினருக்கும், விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் பெ.சண்மு கம் உள்பட அனைவரையும் குண்டுக் கட் டாக இழுத்துச் சென்று கைதுசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆகியோர் விவசாயிகள் சங்க தலைவர்களிடம் பேச்சு நடத்தி னர். தகுதியான அனைவருக்கும் அடுத்த ஒரு மாதத்தில் குடிமனை பட்டாக்கள் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.
இந்தபோராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்டச் செய லாளர் ஜி.சம்பத், வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், கோயில் நிலங்கள் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.வி.நக்கீரன், துணைத் தலைவர்கள் பி.கருணாமூர்த்தி, வெங்கட்டாதிரி, செல்வராணி, ரவி, ராணி உட்பட பலர் கலந்துகொண்ட னர்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் பட்டாக்களை வழங்குவதாக சொன்னாலும், இன்னும் ஆயிரக்
கணக்கான மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் கிடைக்கவில்லை. செதில்பாக்கத்தில் ஆதிதிராவிட மக்கள் கடந்த 6 ஆண்டுகளாக போராடி
வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு
புறம்போக்கு நிலத்தில் வாழும் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு அரசு சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.