திருவள்ளூர், பிப் 14- திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட 67 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பி னர் பெ.சண்முகம் வலியுறுத்தி யுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திரு வாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள், அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டத்தில் உள்ள விவசாயிகள், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரு பகுதி விவசாயிகள் என 3000 திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள், கரும்பு அனுப்பு கின்றனர்.
இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் கரும்பு விவ சாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றால், சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும் சர்க்கரைத்துறை ஆணையமோ கரும்பு விவசாயிகளின் கோரிக் கையை ஏற்க மறுக்கிறது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட வேண்டும் மாவட்ட ஆட்சியர், ஆலையை மேம்படுத்திடும் வகையில் சர்க்கரை ஆலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி ஆலையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசிற்கு உரிய பரிந்துரையை கொடுத்திட வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (பிப் 14), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டோல்கேட்டில் பெருந்திரள் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
பெ.சண்முகம்
இதில் பெ.சண்முகம் பேசுசுகை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் போராட் டங்கள் விளைவாக கடந்த ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு அப்போதைய தொழில் துறை அமைச்சர் நேரடியாக திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வந்து, விவசாயிகள் மத்தியில் பேசினார். பின்னர் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 67 கோடி ரூபாய் ஒதுக்கினால் ஆலையை நவீனப் படுத்த முடியும் என்றது. மூன்று ஆண்டு கள் கடந்த பிறகும் நிபுணர் குழுவின் பரிந்துரையை தமிழ்நாடு அரசு நிறை வேற்றவில்லை.
பல ஆலைகளில் கரும்பு இல்லாத தால் அரவை இல்லாமல் உள்ளது. ஆனால் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அப்பகுதியில் கரும்பு அபரி விதமாக உற்பத்தியாகிறது. அதுவும் நல்ல சர்க்கரை சத்துள்ள கரும்பு விளைவிக்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை பாது காக்கப்பட வேண்டும், உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டும். இதற்கு ஆலையை நவீன மயமாக்க வேண்டும் என்றால் நிபுணர் குழுவின் பரிந்து ரையின் அடிப்படையில் வரக்கூடிய நிதிநிலை அறிக்கையிலேயே திருத் தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நவீனப்படுத்துவதற்கான 67 கோடி ரூபாயை உடனடியாக தமிழ்நாடு அர சாங்கம் ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இந்த ஆலையை மேம்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
இதற்கு கட்சியின் மாவட்ட செய லாளர் எஸ்.கோபால் தலைமை தாங்கி னார். இதில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சண்முகம், மாநில கட்டு ப்பாடு குழு தலைவர் ப.சுந்தரராசன், மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்பு ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந் திரன், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், சி.பெருமாள், இ.மோகனா, வட்டச் செயலாளர்கள் ஆர்.தமிழ்அரசு (திருவள்ளூர்), ஏ.ஜி.கண்ணன் (ஊத்துக்கோட்டை), வி.அந்தோணி (திருத்தணி), ஜெ.ராபட்எபிநேசர் (பூந்தமல்லி), ஏ.சிவபிரசாத் (ஆர்.கே.பேட்டை), மாவட்ட குழு உறுப்பி னர் ஏ.அப்சல்அகமது, கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஸ்ரீநாத் ஆகியோர் பேசினர்.