திருமுருகன்பூண்டி நகராட்சியில் அவசரக் கூட்டத்தில் ஊழியர்கள் தனியார் மையமாக்கும் தீர்மானத்தை கண்டித்து சிபிஎம் கவுன்சிலர்கள் உட்பட 18 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
திருமுருகன்பூண்டி நகராட்சியின் அவசரக் கூட்டம் நகர மன்ற தலைவர் குமார் தலைமையிலும், நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில்ஊழியர்கள் தனியார் மையம் ஆக்குவது டெண்டர் விடும் தீர்மானம் உட்பட பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் தனியார் மையம் ஆகும் தீர்மானத்தை முன்மொழிந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார்வதி, ஆகியோர்கள் ஊழியர்களை தனியார் மையம் ஆக்குவதை கண்டிக்கிறோம், எட்டு மணி நேர வேலை 12 மணி நேரம் ஆக்குவதை கண்டிக்கிறோம் என தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர மன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் 10 பேர் உட்பட 18 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, கண்டன முழக்கம் எழுப்பினர்