அவிநாசி, ஜூன் 11- பழங்கரை ஊராட்சியை திருப்பூர் மாநக ராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என அனைத்து கட்சி கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட் சிக்கு உட்பட்ட அவிநாசிலிங்கம் பாளை யத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செவ்வாயன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் கோபால் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநகராட்சி பகுதியில் பல வார்டுகளில் சாலைகள் சீர மைக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், பழங்கரை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. அப்படி இணைத்துவிட்டால், வரிச்சுமை அதிகமாகும். மேலும், அரசு அலுவலகங்களுக்கு செல்ல 15 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். 100 நாள் வேலை திட்டம் பணியா ளர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகும்.
எனவே அரசு பழங்கரையை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை உட னடியாக கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக பழங்கரை ஊராட்சியை இணை பேரூராட்சியாக தரம் உயர்தலாம் அல்லது, அவிநாசியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தலாம் என அனைத்து கட்சி கூட் டத்தில் முடிவு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, துறை சார்ந்த அதிகாரிக ளுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் ஈஸ்வரமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் மணி, பழனிச்சாமி, சிபிஐ தங்கராஜ், திமுக ஒன்றியக் கவுன்சிலர் கார்த்திகேயன், தங்க ராஜ், அதிமுக பழங்கரை ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி, ஊராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம், தேமுதிக ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பிரசாந்த், காங்கிரஸ் பழ னிச்சாமி, பாஜக ராமசாமி, பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.