districts

img

சமையலர் பாப்பாள் வழக்கு விசாரணை

திருப்பூர், ஜூலை 3 – திருப்பூரில் புதன்கிழமை மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவிநாசி வட்டம் திருமலைகவுண்டம்பாளையத்தில் பாப்பாள் என்பவர் அரசு சத்துணவு சமையலராக நியமிக்கப்பட்டார். அங்கு இருக்கும் ஆதிக்க சக்திகள் பாப்பாள் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பதால் பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்தது தொடர்பான வழக்கு விசாரணை

தற்போது திருப்பூர் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. வழக்கறிஞர் பாண்டியனின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கில் அவரை சிறப்பு வழக்கறிஞராக மாவட்ட ஆட்சியர் நியமித்தார். இந்த வழக்கை தொடர் விசாரணை செய்ய வேண்டும் என நான் (ப.பா.மோகன்) மனு  கொடுத்தேன். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 173 உ பிரிவு 8இன்படி நான் போட்ட மனுவை புதிதாக வன்கொ டுமை வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிமன்றம் அன்றைக்கே எடுத்தது அன்றே தள்ளுபடி செய்துவிட்டது. 

அதன்பின்பும் பாப்பாள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வர்கள் அமர வைத்து விசாரிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட வரின் மாண்பும் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும். குற்றம்சாட்டப் பட்ட பழனிசாமி, பாப்பாளை, நீதிமன்றவளாகத்தில் வைத்தே மிரட்டினார். போதாக்குறைக்குநீதிபதியும் பாப்பாளை, தினசரி இங்கு வந்தால், அங்கு யார் சமைப்பது என கேட்டிருக்கிறார். சிறப்பு வழக்கறிஞரை, பணம் மற்றும் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள் என்று கூறியுள்ளார். 

சிறப்பு நீதிமன்றம் உரிய முறையில் இந்த வழக்கை விசாரிக்கவில்லை. சிறப்பு நீதிமன்றம் முறையாக இந்த  வழக்கை விசாரிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு ப.பா.மோகன் தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர் சையது இப்ராகிம், வழக்கறிஞர் வீ.நந்தகுமார், தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாநிலத் துணைத் தலைவர்  யு.கே.சிவஞானம், மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ், ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை நிறுவனர் அ.சு.பவுத்தன், ஆதித்தமிழர் பேரவை மகளிர் அணிச் செய லாளர் மு.கவிதா, த.பெ.திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இரா.ரமேஷ்பாபு, திராவிடர் விடுதலை கழக மாவட்டத் தலைவர் முகில் ராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.