திருநெல்வேலி, ஜூலை 27- கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு லட்சம் மில்லியன் யூனிட் மின்சா ரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் 2X1,000 மெகாவாட் உலைகள் ரஷ்யா வின் ரோசாட்டம் ஸ்டேட் கார்ப்ப ரேஷனின் தொழில்நுட்பத்துடன் நிறு வப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் (ஜூலை 26, 2024) வெள்ளிக் கிழமை நூறு கோடி யூனிட் (ஒரு பில்லி யன் யூனிட்) மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் தொகுப்பிற்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
2013-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி கூடங்குளம் அணு உலை- 1 இதுவரை 57,030 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்துள்ளது, அதே சமயம் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 மாதம் இரண்டாவது யூனிட் 42,993 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய் துள்ளது. இரண்டு உலைகளும் கிட்டத் தட்ட 1,00,024.40 மில்லியன் யூனிட் சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. 86 மில்லியன் டன் களுக்கு மேல் கரியமில வாயுவை வளி மண்டலத்தில் வெளியிடுவதை மறை முகமாகத் தவிர்த்துள்ளது. இந்தத் தகவலை கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஜாய் பி.வர்கீஸ் தெரிவித்தார்.
தற்போது, இரண்டு அலகுகளும் வழக்கமான முறையில் செயல்படு கின்றன. சுமார் 50 மில்லியன் இந்தியக் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டதைவிட அதிக செயல்திறனை அணுமின்நிலை யம் கொண்டுள்ளது.
கூடங்குளத்தின் இரண்டு உலைகள் தற்போது மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகின்றன. அதே நேரத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட நான்கு ஒத்த அலகுகள் கட்டுமானத்தில் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சா ரம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங் களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.