தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில், போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளம் விவசாயி சுப்கரன்சிங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் மோடி அரசை கண்டித்தும், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார்.