அரியலூர், ஜூலை 16-
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரில் சனிக் கிழமை நடைபெற்ற தனது தந்தை தொல்காப்பியன் 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நூலகம் மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் மண்டல வாரியாகவும் அமைக்க வேண்டும். மேற்கு, வடக்கு மற்றும் திருச்சி போன்ற மைய மாவட்டங்களில், இத்தகைய நூலகங்கள் உலகத் தரம் வாய்ந்த நூலகங்களாக அமைவது படிக்கும் இளம் தலைமுறை களுக்கும், போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களுக்கும் பய னுள்ளதாக அமையும். பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் மட்டுமே இந்த மகளிர் உரிமைத் தொகையை பெற வேண்டும் என்பதற்காக, முதல்வர் சில வரையறைகளை வகுத்திருக்கலாம்.
ஆனால், அந்த வரையறைகள் பரிசீலனைக்குரியவை. இதனால் பெரும்பாலான பெண்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காத நிலை ஏற்படும். எனவே தமிழக முதல்வர் இந்த வரையறைகளில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.