districts

img

வங்கிகளை காப்போம் தேசத்தை காப்போம் வங்கி ஊழியர்கள் பிரச்சார பயணத்திற்கு வரவேற்பு

பெரம்பலூர், ஜூலை 22 -

     வங்கிகளைக் காப்போம்; தேசத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் பொதுத் துறை, கூட்டுறவு வங்கி மற்றும் கிராம வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னை, கோவை, தூத்துக்குடி,  ஓசூர் ஆகிய நான்கு முனைகளிலிருந்து நான்கு ஆயிரம் கிலோ மீட்டர் பிரச்சாரத் தில் ஈடுபட்டு திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.  

     அதனை தொடர்ந்து சனிக்கிழமை பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்த  குழுவிற்கு நான்கு ரோடு அருகே சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.அகஸ் டின் தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது. பின்னர் புதிய பேருந்து நிலையம்  அருகே பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு  மாவட்டச் செயலாளர் ரெங்கநாதன், சிபிஎம் நகரச் செயலாளர் சிவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   இந்திய வங்கி ஊழியர் சம்மேளனப் பிரச்சார பயணக்குழு வெள்ளியன்று கும்பகோணத்திற்கு வந்தது. பிரச்சார குழு தலைவர் பிரேமலதா தலைமை வகித் தார். குழுவினரை கும்பகோணம் மத்திய  தொழிற்சங்க மாவட்டத் தலைவர் கண் ணன், துணைத் தலைவர் சா.ஜீவ பாரதி, அரசு ஊழியர் சங்கம் வெங்கடே சன், எல்ஐசி ஊழியர் சங்கம் சேகர், அரசு  ஓய்வூதியர் சங்கம் ராஜகோபாலன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் சங்கம் பழ.அன்புமணி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோ கரன், நகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கும்பகோணம் மீன் மார்க்கெட் மற்றும் காந்தி பூங்கா ஆகிய  இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதுக்கோட்டை, ஜூலை 22 -

      அரசு பொதுத்துறை மற்றும் கிராமப்புற  கூட்டுறவு வங்கிகளை காப்பாற்ற வலியு றுத்தி தமிழகத்தில் 4000 கிலோ மீட்டரி லான “தேசம் காப்போம், வங்கிகளைக் காப்போம்” எனும் வேன் பிரச்சார பயணம்  சனிக்கிழமை திருச்சியில் நிறைவுபெற்றது.

    அகில இந்திய வங்கி ஊழியர் சம்மே ளன மாநில தலைவர் எஸ்.பிரேமலதா, மாநிலச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், அகில இந்திய துணை செயலாளர் சுனில் குமார், மாநில தலைவர் சர்வேசன், கூட்டுறவு சங்க மாநிலச் செயலாளர் சண் முகம் உள்ளிட்ட பயணக் குழுவினர் சனிக் கிழமை கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.

    பிரச்சாரக் குழுவிற்கு கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அ.ராமையன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மு.முத்துகுமார், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கு.ராஜேஷ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் வெ.ரெத்தினவேல், கோ. பன்னீர்செல்வம், மாணவர் சங்க மாவட்ட  செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.