districts

img

திமுக இருசக்கர வாகன பிரச்சார பேரணிக்கு வரவேற்பு

அரியலூர்/பெரம்பலூர், நவ.24- திமுக இளைஞர் அணியின் மாநில  உரிமை மீட்பு 2-வது மாநில மாநாட்டிற் கான இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி கடந்த நவ.15 அன்று கன்னியா குமரி திருவள்ளுவர் சிலை முன்பு தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, இருசக்கர வாகனப் பேரணி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் தொகுதிக்கு வந்தது. இருசக்கர வாக னங்களில் வந்த இளைஞர்களை மாவட்ட எல்லையான ஜெயங்கொண் டம் ஒன்றியம், மேலணிகுழி கிராமத்தில்  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர் வரவேற்றார்.  பின்னர் மேலணிக்குழி கிராமத்தில் துவங்கிய இப்பேரணி, மேலணிகுழி, மீன்சுருட்டி, ஜெ.குறுக்குரோடு, ஜெயங் கொண்டம், தா.பழூர், சுத்தமல்லி, வி. கைகாட்டி, கீழப்பழூர் வழியாக அரிய லூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். வெள்ளியன்று பெரம்ப லூர் மாவட்ட எல்லையான மருதை யான் கோவில் என்ற இடத்திற்கு வந்த  பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட் டது. மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பி னர் எம்.பிரபாகரன் ஆகியோர் வரவேற் றனர். இதில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் நகர்ப்பகுதி முழுவதும் நடைபெற்ற பேரணி நான்கு ரோடு வழியாக கடலூர்  மாவட்டத்தை நோக்கி சென்றது.