கும்பகோணம், ஆக.28 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை தரத் தினை உயர்த்தியதில், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் பங்கு மகத்தானதாக விளங்கியது. மேலும் இந்தியாவின் சிறந்த கூட்டுறவு சங்கமாகவும் அங்கத்தினர்களின் அமுத சுரபியாகவும் திகோ சில்க்ஸ் நிறுவனம் இருந்து வந்தது. இந்நிலையில் அச்சங்கத்தின் விற்பனை குறைவு, புடவைகள் இருப்பு தேக்கம், நிர்வாக சீர்கேடு அங்கத்தினருக்கு வேலையின்மை போன்ற காரணங்களால் மிகவும் நலி வடைந்து வருகிறது. இக்குறை களை போக்கவும், சங்கத்தை பாது காத்திடவும் திகோ சில்க்ஸ் பாது காப்பு ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமாக கைத்தறித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு தனி பொறுப் புடன் மேலாண்மை இயக்குநரை நியமனம் செய்ய வேண்டும். தேங்கி யுள்ள பட்டுப் புடவைகளுக்கு நிபந்த னையின்றி அரசு தள்ளுபடி வழங்க வேண்டும். ஆன்-லைன் விற்பனை மூலமாகவும் நேரடி கிளைகள் திறந் தும் விற்பனையை அதிகரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். அங்கத் தினர்களை அலைக்கழிக்காமல் டிசைன் மாற்றம் செய்து தொடர்ந்து வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் என நேரில் சந்தித்து கோரிக் கைகளை வலியுறுத்தி வருகிறது. ஆனால் சங்க நிர்வாகித்திடம் பல முறை பேசியும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் திகோ சில்க்ஸ் தலைமையக வாயில் முன்பு, திகோ சில்க்ஸ் பாதுகாப்பு ஒருங்கி ணைப்பு குழுவின் நெசவாளர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க கெளரவ தலைவர் சா.ஜீவபாரதி, துணைச் செயலாளர் ஆர்.சேகர், ராம்குமார், ஜி.பக்கிரிசாமி, டி. சொக்கலிங்கம், துணைத் தலைவர் குமுதா, ரமேஷ், பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினர்.