மயிலாடுதுறை, ஜூலை 28- மயிலாடுதுறை மாவட்டம் தென் னாம்பட்டிணம் அருகேயுள்ள கீழமூவர் கரை மீனவ கிராமத்தில் அலையாத்திக் காடுகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகள் நியூஸ் தொண்டு அமைப்பு (கொல்கத்தா) சார்பில் அமைப் பின் திட்ட மேலாளர் கெனி ஜே நியூ போர்ட் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சிய ரின் வழிகாட்டுதல்படி நியூஸ் (இயற்கை சுற்றுச்சூழல் வனவிலங்கு சங்கம்) என்ற தொண்டு அமைப்பு சார்பில், கிரீன் டிஎன் மிஷன் திட்டத்தின்கீழ் மயி லாடுதுறை மாவட்ட கடலோரப் பகுதி களில் சதுப்பு நிலக்காடுகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சி யாக கீழமூவர்கரை அரசினர் உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள், பொது மக்கள் இடையே அலையாத்திக் காடு கள் வளர்ப்பின் அவசியம் குறித்தும், அலையாத்திக் காடுகள் சந்திக்கும் ஆபத் துக்கள் குறித்தும், அலையாத்திக் காடு களால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கீழமூவர்கரை மீனவ பஞ்சாயத் தார்கள் தலைமையில், பள்ளி தலை மையாசிரியர் முன்னிலையில் நடந்த முகாமில், மாணவர்கள், கிராம மக்கள், பெண்கள் கலந்து கொண்டனர். முகாமை தொடர்ந்து சதுப்பு நிலக் காடுகளின் பாதுகாப்பை வலியுறுத்தி யும், காடுகளால் ஏற்படும் நன்மைகளை வலியுறுத்தும் விதமாகவும் விழிப்பு ணர்வு ஓவியப்போட்டி மாணவர்களி டையே நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள், மாணவர்கள், ஆர்வ முடன் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற னர். கடலோரக் கிராமங்களை கடல ரிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் சுனாமி பேரழிவுக்கு பின், இழந்த பசு மையை மீட்டெடுக்கும் முயற்சியில் நியூஸ் தொண்டு நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்திரபாடி, சின்னங்குடி, வானகிரி, கீழ மூவர்கரை, மேல மூவர்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் அலையாத்தி மரங்களை 100 ஹெக்டேரில் நடவு செய்து வருகிறது. குறிப்பாக கிராம பெண்களுக்கு வேலைவாய்ப்பளித்து அந்த மரக்கன்றுகளை நாள்தோறும் பராமரித்து பாதுகாத்தும் வருகிறது.