மயிலாடுதுறை, பிப்.12 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் பொறை யார் த.பே.மா.லு கல்லூரி முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலப் பொருளாளர் முனைவர் ஏ.சேவியர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் முனைவர் ஸ்ரீதர் தங்கதுரை வரவேற்றார். போராட்டத்தை வாழ்த்தி பேராசிரியர்கள் ராஜன், ரமேஷ்பாபு, சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர் கென்னடி சார்லஸ், ஜெயசீலன் உள்ளிட்டோர் உரையாற்றினர். அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை, எம்ஃபில், பி.ஹெச்.டி-க்கான ஊக்க ஊதியம் மற்றும் இதர கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.