திருச்சிராப்பள்ளி,அக்.17- சீரற்ற இதயத்துடிப்பை சீராக்க நவீன மருத்துவ சிகிச்சைமுறை குறித்த அப்போலோ மருத்துவமனை எலக்ட்ரோ பிசியாலஜி மருத்துவர்களின் பத்திரிகை யாளர் சந்திப்பு சனிக்கிழமை அன்று திருச்சி அப்போ லோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் எலெக்ட்ரோபிசியாலஜி துறை டாக்டர் விஜய சேகர், மூத்த இதயவியல் நிபுணர்கள் காதர், ரவீந்தி ரன், மயக்கவியல் ரோகிணி மய+ர் பாலாஜி, சரவ ணன் ஆகியோர் Radiofrequency Ablation செயல் முறைகள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது : சீரற்ற அதீத இதயதுடிப்பு பிரச்சனைகளால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் நோயாளிகளை அதிநவீன சிகிச்சை முறையின் மூலம் குணப்படுத்தி திருச்சி அப்போலோ மருத்துவமனை எலெக்ட்ரோ பிசியாலஜி துறை மருத்துவர்கள் சாதனை படைத்துள் ளனர். அதீத இதய துடிப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு படபடப்பு, மூச்சு திணறல், மயக்கம் அடிக்கடி ஏற்படும். சிலருக்கு பக்கவாதம் வரும் அபாயமும் உள்ளது. இத்தகைய பிரச்சனைகளை குணப்படுத்துவதில் தான் சிறப்பான பணியை எலெக்ட்ரோபிசியாலஜி துறை செய்துவருகிறது. திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங் களில் முதல்முறையாக தொழில்நுட்பத்தை (3 D mapping Radio frequency ablation Pulmonary Vein isolation) பயன்படுத்தி நுண்துளை முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அந்தப் பெண் மூன்றே நாளில் குணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 6 மாதங்களில், பல்வேறு இதய பிரச்ச னைகளுடன் அனுமதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட நோயாளிகளை நவீன சிகிச்சை முறைகள் வாயிலாக எலெக்ட்ரோபிசியாலஜி துறை மருத்துவர் டாக்டர் விஜய சேகர் குணமடையச் செய்துள்ளார். அதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு Radiofrequency Ablation என்னும் கதிரியக்க சிகிச்சை மூலம் இதய துடிப்பு கோளாறு கள் சீர் செய்யப்பட்டிருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த அதிநவீன எலெக்ட்ரோ பிசி யாலஜி சேவைகளை திருச்சி, டெல்டா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அறிமுகப்படுத்தி அவர்களின் இதய பிரச்சனைகளை சரி செய்வதிலும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் திருச்சி அப்போலோ மருத்துவ மனை முன்னோடியாக திகழ்வது பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது திருச்சி அப்போலோ மருத்துவமனை தலைமை அதிகாரி ஜெயராமன், மருத்துவமனை நிர்வாகி சிவம் ஆகியோர் உடனிருந்தனர்.