districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருச்சி - தாம்பரம் ரயில் வாரம் 3 நாள் இயங்கும்

பாபநாசம், டிச.24 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தற்சமயம் இயங்கி வரும் திருச்சி - தாம்பரம் இண்டர்சிட்டி விரைவு ரயில் (06190/06191) டிசம்பர் 27 அன்று முதல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், மயிலாடுதுறை பயணிகள்  சங்கம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 2025 ஜனவரி  3 முதல் பிப்ரவரி 28 வரை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் (வெள்ளி,  சனி, ஞாயிறு) இயக்க உத்தேசித்துள்ளதாக தென்னக ரயில்வே அறி விப்பு வெளியிட்டுள்ளது.

 இதற்காக, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மற்றும் உயர் அலுவலர்கள், பரிந்துரைத்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த ரயில், தாம்பரத்திலிருந்து மதியம் 3.30-க்கு புறப்பட்டு, இரவு 9:30-க்கு பாபநாசம் வந்து சேரும்.

மேலும், 2025 ஜனவரி மாதம் முதல் புதிய கால அட்டவணையின்படி, சென்னையில் புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் (16865) இரவு 10:15-க்கு பதிலாக, இரவு 10:25 மணிக்கு புறப்பட்டு காலை 4:40 மணிக்கு பாபநாசம் வந்து சேரும். அதேபோல் தாம்பரம் - நாகர்கோயில் அந்யோதயா எக்ஸ்பிரஸ் தாம்ப ரத்தில் இருந்து இரவு 10:40-க்கு புறப்பட்டு, காலை 4:28 மணிக்கு கும்ப கோணம் வந்து சேரும்” என கூறப்பட்டுள்ளது.

30 மாற்றுத்திறனாளிகளுக்கு  அடையாள அட்டை வழங்கல்

கும்பகோணம், டிச.24 - தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் கோட்ட அளவிலான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம்  அல் அமீன் பள்ளியில் நடைபெற்றது.

முகாமிற்கு கும்பகோணம் கோட்ட சார் ஆட்சியர் ஹிருத்திகா விஜயன் தலைமை வகித்தார். கும்பகோணம் அரசு தலைமை மருத்துவ மனை கண்காணிப்பாளர் கம்ருள் ஜமால், மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் (பொ) தட்சிணாமூர்த்தி, வட்ட வழங்க அலுவலர் அருள் பிரகாசம், சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் சாந்தா மீனா, பல்நோக்கு மாற்றுத்திறனாளிகள் அலுவலர் முருகேஸ்வரி உள்ளிட்டோர் குறைகளை கேட்டறிந்தனர்.

விண்ணப்பித்த 30 மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ்நாடு  மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையும் ஒரு மாற்றுத்திறனா ளிக்கு சக்கர நாற்காலி பொருத்திய வண்டியும் வழங்கப்பட்டது. முகா மில் 130-க்கும் மேற்பட்ட மனுக்களை பரிசீலனைக்காக எடுத்துக் கொண்டனர்.  

பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் தாலுகா வில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க பொறுப்பா ளர்கள் பழ. அன்புமணி, சுந்தர விமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கை நெசவுத் தொழிலாளர்கள்  சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

அரியலூர், டிச.24 - ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற கை நெசவு தொழிலாளர்கள் சங்க சிறப்பு பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கை நெசவு தொழிலா ளர் சங்க ஆண்டு பேரவை அழகுதுரை தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.என்.துரைராஜ் வேலை அறிக்கையை யும், ஜி.தங்கராசு வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

மாவட்டத் தலைவராக எஸ்.என்.துரைராஜ், மாவட்டச் செயலாளராக பி.அழகுதுரை, பொருளாளராக ஜி.தங்கராசு, மாவட்டத் துணைத் தலை வர்களாக கு.அன்பழகன், டி.கணேசன், துணைச் செயலாளராக ஆர். அன்பழகன், பா.இளையராஜா உட்பட 9 பேர் கொண்ட மாவட்டக் குழு  தேர்ந்தெடுக்கப்பட்டது.  

மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். மணிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம், மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், கைத்தறி சங்க மாநிலச் செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டை பொதுக் குழு அமைத்து நடத்தக் கோரிக்கை

புதுக்கோட்டை, டிச.24 - மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டாக நடைபெறும் தச்சங்குறிச்சி  ஜல்லிக்கட்டு போட்டியை, ஒரு தரப்பினர் மட்டும் நடத்திடா மல், அனைத்து சமூக அமைப்பினரையும் இணைத்து பொது வான குழு அமைத்து நடத்த வேண்டுமென ஊர்ப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை நடைபெற்ற  மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு வில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத்  தொகுதிக்குட்பட்ட தச்சங்குறிச்சியில் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு  வரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் நடத்தி வருகின்றனர். இதனால் பிற சமூகத்தினரை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. சமூக மோதலைத்  தவிர்க்கும் வகையில், அனைத்து சமூக மக்களையும் இணைத்து  பொதுவான விழாக்குழு அமைத்து நிகழாண்டில் போட்டியை நடத்த வேண்டும். அல்லது போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.